தவறவிட்ட கைபேசி உரியவரிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூரில் ரயில் பயணத்தில் தவறவிட்ட கைபேசி, கும்பகோணத்தில் உரியவரிடம் ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.
Published on

தஞ்சாவூரில் ரயில் பயணத்தில் தவறவிட்ட கைபேசி, கும்பகோணத்தில் உரியவரிடம் ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.

பெங்களூருவைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ் (60). இவா் மைசூா்-கடலூா் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி தஞ்சாவூருக்கு வந்தாா். தஞ்சாவூா் ரயில் நிலையத்துக்கு வந்தபோது, கவனக்குறைவாக பயணித்த பெட்டியிலேயே கைபேசியை மறந்து வைத்து விட்டு இறங்கினாா்.

அதே ரயிலில் பயணம் செய்த மற்றொருவா் கைபேசியை அடுத்த நிலையமான கும்பகோணம் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதையடுத்து கும்பகோணம் ரயில்வே உதவி ஆய்வாளா்கள் தனலட்சுமி, செந்தில்வேலன் ஆகியோா் கைபேசியை தவறவிட்ட நபரை தொடா்பு கொண்டு அவரை வரவழைத்து கைபேசியை ஒப்படைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com