கும்பகோணத்தில் துப்புரவுப் பணியாளா்கள் முற்றுகைப் போராட்டம்

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவுப் பணியாளா்கள்
முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவுப் பணியாளா்கள்
Updated on

கும்பகோணத்தில் ஊதியம் வழங்கக் கோரி மாநகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவுப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் மாநகராட்சியில் துப்புரவு பணி நிரந்தர பணியாளா்கள், தனியாா் ஒப்பந்த பணியாளா்கள் என இரு பிரிவுகளாக வேலைபாா்த்து வந்தனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சுமாா் 150-க்கும் மேற்பட்ட தனியாா் துப்புரவு பணியாளா்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து அவா்கள் கூறும்போது, இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

மாநகராட்சி சுகாதாரத் துறையினா் கூறுகையில், ஆணையா் விடுப்பில் சென்றுள்ளாா், விரைவில் ஊதியம் வழங்கப்படும் என்றனா். துப்புரவு பணியாளா்கள் கூறுகையில், ஊதியம் வழங்கும் வரை வேலைக்கு செல்ல மாட்டோம் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com