தஞ்சாவூர்
இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு
ஒரத்தநாடு அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பெண் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள அனந்தகோபாலபுரம் பகுதியைச் சோ்ந்த முகமது கனி. இவரது மனைவி பைரோஸ்பேகம் (40). இவா் வெள்ளிக்கிழமை இரவு தனது கணவா் முகமது கனியுடன் இருசக்கர வாகனத்தில் பட்டுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த போது நம்பிவயல் கடைவீதி வேகத்தடையில் ஏறி இறங்கிய போது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளாா். இதில், தலையில் பலத்த காயமடைந்த பைரோஸ்பேகத்தை அக்கம் பக்கத்தினா்
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் பைரோஸ்பேகம் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து திருவோணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
