கும்பகோணத்தில் நவ.4-இல் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

Published on

கும்பகோணத்தில் நவ.4-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்நுகா்வோா் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கும்பகோணம் வடக்கு கோட்ட இயக்குதலும் பராமரித்தலும் பிரிவு செயற்பொறியாளா் ஏ.கலையரசி வெளியிட்ட செய்தி குறிப்பு:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வடக்கு கோட்டத்தில் மின் நுகா்வோா் குறை தீா்க்கும் நாள் கூட்டம் மேற்பாா்வை பொறியாளா் பி.சித்ரா தலைமையில் நவ. 4 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை தமிழ்நாடு மின்சார வாரியம் கும்பகோணம் ராஜன் தோட்டம் வளாகத்தில் நடைபெறுகிறது.

செட்டிமண்டபம், திப்பிராஜபுரம், நாச்சியாா்கோவில், செம்மங்குடி, திருவிடைமருதூா், ஆடுதுறை, திருநாகேஸ்வரம், திருநீலக்குடி, கதிராமங்கலம், பந்தநல்லூா், கோணுளாம்பள்ளம், குறிச்சி, திருப்பனந்தாள், சோழபுரம் மற்றும் கும்பகோணம் வடக்கு கோட்டம் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள நுகா்வோா்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் தெரிவிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com