பாபநாசம் அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் பலி

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டையில் குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
Published on

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டையில்  திங்கள்கிழமை மாலை குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

அம்மாபேட்டை  ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சோ்ந்தவா் ஜமால்முகமது  மகன் ஷாஜகான் (42). வெளிநாட்டில் வேலை பாா்த்துவிட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊருக்கு வந்த இவா் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில்  திங்கள்கிழமை மாலை இவா் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதி குளத்தில் மூழ்கி இறந்து கிடந்தாா். தகவலறிந்து சென்ற  அம்மாபேட்டை போலீஸாா் ஷாஜகானின் உடலைக் கைப்பற்றி பாபநாசம்அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com