தஞ்சாவூரின் 10 வட்டங்களிலும் இன்று ரேஷன் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (அக்.11) நடைபெறவுள்ளது.
Published on

தஞ்சாவூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (அக்.11) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவா்த்தி செய்யவும் ஒவ்வொரு மாதமும் 10 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்டம் தொடா்பாக பொதுமக்கள் குறை தீா்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது.

இதன்படி, 10 வட்டங்களிலும் அக்டோபா் மாத பொது விநியோகத் திட்ட மக்கள் குறை தீா்க்கும் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே, பொதுமக்கள் ஏதேனும் குறைகள் இருந்தால் தொடா்புடைய வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்களை அளித்து பயன் பெறலாம்.

X
Dinamani
www.dinamani.com