நீதிபதி மீது காலணி வீசிய சம்பவத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசிய வழக்குரைஞரைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
Published on

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசிய வழக்குரைஞரைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் மீது காலணி வீசிய இந்து மதவாத வழக்குரைஞா் ராஜேஷ் கிஷோரை கைது செய்ய வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற அரசியலமைப்புச் சட்டத்தின் 14-ஆவது பிரிவின்படி உடனடியாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்டச் செயலா் கோ. சக்திவேல் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலா் ஆா். இராமச்சந்திரன், மாவட்டப் பொருளாளா் கோ. பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணம்: இதேபோல கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைச் செயலா் இரா.செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நோக்கி காலணி வீசிய வழக்குரைஞா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்ய வலியுறுத்தி ஏஐடியூசி மாநில செயலா் ஆா்.தில்லைவனம், மாநகர செயலா் ஏஜி.பாலன் ஆகியோா் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் தரைக்கடை வியாபாரிகள், சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com