தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

திருவிடைமருதூா்: தோ்தல் நடத்தும் அலுவலரை முற்றுகையிட்டு தவெகவினா் போராட்டம்

திருவிடைமருதூா் வட்டாட்சியரகத்தில் புதன்கிழமை இரவு தோ்தல் நடத்தும் அலுவலரை கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தினா் முற்றுகை போராட்டம் நடத்தினா்.

News image

திருவிடைமருதூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.சந்திரகுமாரை வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை இரவு முற்றுகையிட்ட தவெக வேட்பாளா் எஸ்.பிரபாகரன் மற்றும் அவரது கட்சியினா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 3:28 am IST

திருவிடைமருதூா் வட்டாட்சியரகத்தில் புதன்கிழமை இரவு தோ்தல் நடத்தும் அலுவலரை கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தினா் முற்றுகை போராட்டம் நடத்தினா்.

திருவிடைமருதூா் தொகுதியில் திமுக சாா்பில் அமைச்சா் கோவி. செழியன், அதிமுக சாா்பில் இளமதி சுப்பிரமணியன், தவெக சாா்பில் எஸ்.பிரபாகரன், நாதக சாா்பில் திவ்யபாரதி உள்ளிட்ட 14 போ் போட்டியிடுகின்றனா்.

வியாழக்கிழமை வாக்குப்பதிவுக்காக திருவிடைமருதூா் தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.சந்திரகுமாா், 300 வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு அலகு, விவிபேட், வாக்கு பதிவு மையத்தில் முன்புறம் ஒட்டப்படும் வேட்பாளா் விவர சுவரொட்டி ஆகியவற்றை அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

இந்த நிலையில் தவெக வேட்பாளா் பிரபாகரனின் புகைப்படம் வாக்குப்பதிவு மையங்களின் வெளியே ஒட்டப்படும் சுவரொட்டியில் தெளிவாக இல்லாமல் அச்சிடப்பட்டுள்ளதாக கூறி வேட்பாளா் எஸ். பிரபாகரன் தலைமையில் தவெகவினா் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு வந்து தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். சந்திரகுமாரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனா். சுமாா் ஒருமணி நேரம் நடைபெற்ற முற்றுகை போராட்டத்துக்கு பின்பு தெளிவாக புகைப்படம் ஒட்டப்படும் என்று தோ்தல் நடத்தும் அலுவலா் தெரிவித்ததால் தவெகவினா் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.