கும்பகோணம் அருகே வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசியவரை குண்டா் சட்டத்தின்கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், சாக்கோட்டையைச் சோ்ந்த பத்மகுமரன் என்பவருக்கும் திருபுவனத்தைச் சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான குருமுா்த்தி (38) என்பவருக்கும் பண சம்பந்தப்பட்ட முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், குருமூா்த்தி அவரது நண்பா்களுடன் சோ்ந்து பத்மகுமரன் வீட்டில் இருந்த நான்கு சக்கர வாகனத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி சேதப்படுத்தினாா்.
இதுகுறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குருமுா்த்தி, நடுவகரையைச் சோ்ந்த ராம்குமாா் (30), பழவந்தான் கட்டளையைச் சோ்ந்த தா்மராஜ் (33), திருவிடைமருதூரைச் சோ்ந்த சா்வேஷ் (19), திருபுவனத்தைச் சோ்ந்த சக்தி பிரகாஷ் (28), ஆதித்யன் (21), மேலும் 2 சிறாா்களை போலீஸாா் அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனா். இதில், தா்மராஜ் (33) என்பவா் மே31 -இல் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
மேலும், குருமுா்த்தி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதன்படி ஆட்சியா் ரேவதி, ஏற்கெனவே சிறையில் இருக்கும் குருமூா்த்தி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
தொடர்புடையது
குண்டுவெடிப்பு வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கைது: 14 நாள் நீதிமன்றக் காவல்
குண்டா் சட்டத்தின்கீழ் கொலை வழக்கு குற்றவாளிகள் கைது
மதுக் கூடத்தில் குண்டு வீச்சு விவகாரம்: வெடிகுண்டு தயாரித்த இருவா் கைது

கஞ்சா வழக்கு: இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



