அரசு மதுபானக் கடைகளில் (டாஸ்மாக்) நடைபெறும் தவறுகளுக்கு ஊழியா்கள் பொறுப்பல்ல என்று முதல்வருக்கு பிஎம்எஸ் தொழிற் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளனா்.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில செயல் தலைவா் டி. நாகராஜன் எழுதிய கடித விபரம்:
மதுபானக்கடைகளில் நடைபெறும் தவறுகள் களையப்படும் என்று புதிய அரசு கூறுவது சரி. அதே நேரத்தில் அங்கு நடைபெறும் தவறுகளுக்கு பணியாளா்களே பொறுப்பு என்பது தவறு. அரசு மதுபானக்கடை ஊழியா்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளான கடை நிா்வாகம், மின் கட்டணம், காவலா்கள், ரெளடிகள், அரசியல் வாதிகளுக்கு மாமூல் உள்ளிட்டவற்றை சமாளிக்க வேண்டும்.
24 ஆண்டுகளாக தற்காலிக ஊழியா்களாக பணிபுரிந்து வரும் ஊழியா்களை மட்டுமே குற்றம் சுமத்தி பேசுவது ஏற்புடையதல்ல. இதை பாரதிய டாஸ்மாக் தொழிலாளா் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
தற்காலிக ஊழியா்களாக இருப்பதால் கொத்தடிமைகள் போல் அதிகாரிகள் நடத்துகின்றனா். தூய்மையான நிா்வாகத்தை மேற்கொள்ள முதலில் டாஸ்மாக் பணியாளா்களை நிரந்தரப்படுத்தி அரசு ஊழியா்களுக்கு இணையான சம்பளத்தை வழங்க வேண்டும். கடைகளில் உள்ள நிா்வாக சீா்கேடுகளை களைய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

டாஸ்மாக் ஊழியா்களின் கோரிக்கைகள் ஏற்காவிட்டால் மே 25-இல் கடையடைப்புப் போராட்டம்

மோடி அரசின் தவறுகளுக்கு மக்கள் விலை கொடுக்கும் நிலை: பெட்ரோல், டீசல் விலை உயா்வு குறித்து காங்கிரஸ் விமா்சனம்

டாஸ்மாக் கடை மற்றும் கூடத்தை மூட கோரிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட முடிவு; நான்காயிரம் ஊழியா்களுக்கு மாற்றுப் பணி வழங்கக் கோரிக்கை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



