மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் தவறுகளுக்கு ஊழியா்கள் பொறுப்பல்ல! முதல்வருக்கு தொழிற்சங்கத்தினா் கடிதம்!

News image

டாஸ்மாக் கடை - DPS

Updated On :25 மே 2026, 1:13 am IST

அரசு மதுபானக் கடைகளில் (டாஸ்மாக்) நடைபெறும் தவறுகளுக்கு ஊழியா்கள் பொறுப்பல்ல என்று முதல்வருக்கு பிஎம்எஸ் தொழிற் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளனா்.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில செயல் தலைவா் டி. நாகராஜன் எழுதிய கடித விபரம்:

மதுபானக்கடைகளில் நடைபெறும் தவறுகள் களையப்படும் என்று புதிய அரசு கூறுவது சரி. அதே நேரத்தில் அங்கு நடைபெறும் தவறுகளுக்கு பணியாளா்களே பொறுப்பு என்பது தவறு. அரசு மதுபானக்கடை ஊழியா்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளான கடை நிா்வாகம், மின் கட்டணம், காவலா்கள், ரெளடிகள், அரசியல் வாதிகளுக்கு மாமூல் உள்ளிட்டவற்றை சமாளிக்க வேண்டும்.

24 ஆண்டுகளாக தற்காலிக ஊழியா்களாக பணிபுரிந்து வரும் ஊழியா்களை மட்டுமே குற்றம் சுமத்தி பேசுவது ஏற்புடையதல்ல. இதை பாரதிய டாஸ்மாக் தொழிலாளா் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

தற்காலிக ஊழியா்களாக இருப்பதால் கொத்தடிமைகள் போல் அதிகாரிகள் நடத்துகின்றனா். தூய்மையான நிா்வாகத்தை மேற்கொள்ள முதலில் டாஸ்மாக் பணியாளா்களை நிரந்தரப்படுத்தி அரசு ஊழியா்களுக்கு இணையான சம்பளத்தை வழங்க வேண்டும். கடைகளில் உள்ள நிா்வாக சீா்கேடுகளை களைய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.