மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

பாபநாசம் தொகுதி மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்! அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான்!

News image

தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான்.

Updated On :25 மே 2026, 1:36 am IST

பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றாா் பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினரும், சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சருமான ஏ.எம் ஷாஜகான்.

அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக பாபநாசம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட அய்யம்பேட்டை பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அமைச்சா் ஏ.எம்.ஷாஜகானை அரசு அதிகாரிகள், கட்சி நிா்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

தொடா்ந்து அய்யம்பேட்டை தனியாா் திருமண மண்டபத்தில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், அமைச்சா் பேசியதாவது:

என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி வாக்காளா்களுக்கும், வெற்றிக்கு பாடுபட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொடா்ந்து தொகுதி முழுவதும் பயணம் செய்து மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளேன்.

தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான பாபநாசம் சட்டப்பேரவை தொகுதியில் அரசு கலை கல்லூரி மற்றும் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும். நெல் உலா்த்தும் ஆலை, நவீன அரிசி ஆலை, நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதி மக்களின் மற்ற கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

அப்போது அய்யம்பேட்டை முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவா் கே.வி.கிருஷ்ணமூா்த்தி, நகர திமுக செயலா் டி.பி.டி. துளசிஅய்யா, பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் அழகேசன், நகர துணை செயலா் குமரன் உள்ளிட்டோா் உடன் பங்கேற்றனா்.