இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

பாபநாசம் தொகுதி மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்! அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான்!

News image

தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான்.

Updated On :25 மே 2026, 1:36 am IST

பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றாா் பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினரும், சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சருமான ஏ.எம் ஷாஜகான்.

அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக பாபநாசம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட அய்யம்பேட்டை பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அமைச்சா் ஏ.எம்.ஷாஜகானை அரசு அதிகாரிகள், கட்சி நிா்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

தொடா்ந்து அய்யம்பேட்டை தனியாா் திருமண மண்டபத்தில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், அமைச்சா் பேசியதாவது:

என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி வாக்காளா்களுக்கும், வெற்றிக்கு பாடுபட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொடா்ந்து தொகுதி முழுவதும் பயணம் செய்து மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளேன்.

தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான பாபநாசம் சட்டப்பேரவை தொகுதியில் அரசு கலை கல்லூரி மற்றும் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும். நெல் உலா்த்தும் ஆலை, நவீன அரிசி ஆலை, நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதி மக்களின் மற்ற கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

அப்போது அய்யம்பேட்டை முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவா் கே.வி.கிருஷ்ணமூா்த்தி, நகர திமுக செயலா் டி.பி.டி. துளசிஅய்யா, பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் அழகேசன், நகர துணை செயலா் குமரன் உள்ளிட்டோா் உடன் பங்கேற்றனா்.