மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் கீழப்பழூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகத்துக்கு அஞ்சலி

  மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கநாளையொட்டி திருச்சி தென்னூர் அண்ணாநகரிலுள்ள விராலிமலை சண்முகம், கீழப்பழூர் சின்னச்சாமி ஆகியோரின் சமாதிகளுக்கு அதிமுக, திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினர்.

  மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கநாளையொட்டி திருச்சி தென்னூர் அண்ணாநகரிலுள்ள விராலிமலை சண்முகம், கீழப்பழூர் சின்னச்சாமி ஆகியோரின் சமாதிகளுக்கு அதிமுக, திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினர்.

  ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் நடைபெற்ற மாணவர் எழுச்சிóப் போராட்டத்தின்போது, திருச்சியில் 1964 ஜன. 24ஆம் தேதி ரயில்வே ஜங்சன் முன்பு பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டு இறந்தவர் கீழப்பழூர் சின்னச்சாமி.

  தொடர்ந்து 1965 பிப். 23ஆம் தேதி வீட்டிலிருந்த மூட்டைப் பூச்சி மருந்தைக் குடித்துவிட்டு, 25ஆம்தேதி உயிரிழந்தவர் விராலிமலை சண்முகம். இவர்கள் இருவரின் சமாதிகளும் திருச்சி தென்னூர் அண்ணாநகர் பகுதியில் உய்யக்கொண்டான் ஆற்றங்கரையோரம் உள்ளன.

  ஆண்டுதோறும் ஜன. 25ஆம் தேதி மொழிப் போர் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

  இதன்படி, சனிக்கிழமை காலை நீதிமன்றம் அருகேயிருந்து அதிமுகவினர் ஊர்வலமாக வந்தனர். மொழிப்போர் தியாகிகளின் சமாதிகளுக்கு அவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

   இதில், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலர் ப. குமார் எம்பி, மாநில கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் டி.பி. பூனாட்சி, அரசுத் தலைமைக் கொறடாவும், மாநகர் மாவட்ட அதிமுக செயலருமான ஆர். மனோகரன், மேற்குத் தொகுதி எம்எல்ஏ மு. பரஞ்ஜோதி, முசிறி தொகுதி எம்எல்ஏ என்.ஆர். சிவபதி, மாநிலங்களவை உறுப்பினர் டி. ரெத்தினவேல், மாணவரணிச் செயலர் என்.எஸ். பூபதி, ஜெ. பேரவைச் செயலர் ஜெ. சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வீ.ந. சோமசுந்தரம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மாநகரச் செயலர் கவித்துவன், தமிóழ்க் கலை இலக்கியப் பேரவை செயலர் ராஜா ரகுநாதன், பாவாணர் தமிழியக்கம் சார்பில் புலவர் தமிழகன் மற்றும் கிஆபெவி. கதிரேசன் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.

  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநகர் மாவட்டச் செயலர் கா.அரசு, புறநகர் மாவட்டச் செயலர் அ.க. தமிழாதன் உள்ளிட்டோரும், புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அதன் மாநகர் மாவட்டச்செயலர் கோ. சங்கர், புறநகர் மாவட்டச் செயலர் ம. அய்யப்பன் உள்ளிட்டோரும் மாலை அணிவித்தனர்.

  பாமக சார்பில் அதன் மாநிலத் துணைப் பொதுச் செயலர் உமாநாத் தலைமையில் அக்கட்சியினரும் மாலை அணிவித்தனர்.

  மாலையில் திமுக சார்பில் அதன் மாவட்டச் செயலர் கே.என். நேரு தலைமையில், முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே.என். சேகரன், மாநகர திமுக செயலர் மு. அன்பழகன், லால்குடி எம்எல்ஏ அ. செüந்தரபாண்டியன், மாவட்டத் துணைச் செயலர் குடமுருட்டி சேகர்,  உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.

  மதிமுக சார்பில் அதன் மாநகர் மாவட்டச் செயலர் அ. மலர்மன்னன் தலைமையில் புலவர் முருகேசன், மாநகரத் துணைச் செயலர் வெல்லமண்டி சோமு உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

  நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் இரா. பிரபு தலைமையில் அக்கட்சியினர் மலரஞ்சலி செலுத்தினர்.

  அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் அதன் மாநிலத் துணைத் தலைவர் ச.மு. சிவா, மாவட்டச் செயலர் வி.ஆர். தினேஸ் உள்ளிட்டோரும் மலரஞ்சலி செலுத்தினர்.

  இதேபோல, அதிமுக, திமுக, மதிமுக ஆகிய கட்சிகளின் சார்பில் மொழிப் போர்த் தியாகிகள் நாள் பொதுக்கூட்டங்களும் வெவ்வேறு இடங்களில் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com