திருச்சியில் ஏ.டி.எஸ்.பி., மாரடைப்பால் புதன்கிழமை இறந்தார்.
திருச்சி மாவட்ட தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (ஏ.டி.எஸ்.பி.) பணியாற்றியவர் கணேசன் (56). திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள சோபனாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு பாதுகாப்புப் பணி பொறுப்பு கணேசனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதற்கு செல்வதற்காக சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து புதன்கிழமை காலை
புறப்பட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சென்ற சிறிது நேரத்தில் கணேசன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய மண்டல காவல் துறை தலைவர் (ஐ.ஜி.) வரதராஜூலு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) செந்தில்குமார் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று, கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டது. இறந்த ஏ.டி.எஸ்.பி., கணேசனுக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.