முசிறியில் திருச்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நீட் தேர்வு இந்தி திணிப்பு குறித்த சிறப்பு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்தார். கருத்தரங்கத்தை முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.என். நேரு தொடக்கி வைத்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் துரைசாமி, தலைமை கழகப் பேச்சாளர் மனுஷ்யபுத்திரன் ஆகியோர் இந்தி திணிப்பை எதிர்த்தும், நீட் தேர்வில் தமிழகத்திற்க்கு விலக்கு அளிக்க கோரியும் பேசி மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.