சோமரசம்பேட்டையில் இன்று புனித சவேரியார் ஆலய தேர்பவனி

திருச்சி சோமரசம்பேட்டை புனித சவேரியார் ஆலயத்தில் மின் அலங்கார தேர்பவனி, சனிக்கிழமை இரவு நடைபெறுகிறது.

திருச்சி சோமரசம்பேட்டை புனித சவேரியார் ஆலயத்தில் மின் அலங்கார தேர்பவனி, சனிக்கிழமை இரவு நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை, அல்லித்துறையில் உள்ள புனித சவேரியார் ஆலய தேர்த்திருவிழா  நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சப்பர சுற்றுப்பிரகாரம் செல்லுதல் மற்றும் திருப்பலி  நடைபெற்றது. தொடர்ந்து முக்கிய நிகழ்வான, புனித சவேரியார் மின்அலங்கார தேர்பவனி சனிக்கிழமை இரவு 8 மணியளவில் நடைபெறுகிறது.  தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு ஆடம்பர கூட்டுப்பாடல், திருப்பலியும், இரவு 7 மணிக்கு திவ்ய நற்கருணையுடன் விழா நிறைவடைகிறது.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை லூஎட்வர்ட்ராஜா தலைமையில் விழாக்குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com