தரமான ரேசன் பொருள்கள் வழங்க வலியுறுத்தி மறியல்

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டத்திற்குட்பட்ட அலகரை மேற்கு பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் 

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டத்திற்குட்பட்ட அலகரை மேற்கு பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் கடந்த சில மாதங்களாக மண்ணெண்ணய் , பருப்பு  உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் போதிய அளவில் கிடைக்கவில்லை எனவும், தரமான அரிசி வழங்கவில்லை எனவும் இந்தக் குறைகளை சீரமைக்க வலியுறுத்தி முசிறி -  பவித்திரம் சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த தொட்டியம் போலீஸார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரி சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, பொதுமக்கள் தங்களது  போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com