திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டத்திற்குட்பட்ட அலகரை மேற்கு பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் கடந்த சில மாதங்களாக மண்ணெண்ணய் , பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் போதிய அளவில் கிடைக்கவில்லை எனவும், தரமான அரிசி வழங்கவில்லை எனவும் இந்தக் குறைகளை சீரமைக்க வலியுறுத்தி முசிறி - பவித்திரம் சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த தொட்டியம் போலீஸார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரி சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, பொதுமக்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.