அரசுப் பேருந்தில் பணியில் இருந்த நடத்துநர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி, காந்திச்சந்தை அருகேயுள்ள தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாதன் (42). இவர் துவாக்குடி அரசுப் பேருந்து பணிமனையின் கீழ்
இயக்கப்படும் நகரப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்து திருவெறும்பூர் அருகேயுள்ள வ.உ.சி., நகருக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது, கோபிநாதன் திடீரென வாயில் நுரைதள்ளியபடி மயங்கி பேருந்திலேயே விழுந்தார்.
இதனையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்த திருவெறும்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.