திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் ஆமூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து 49 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் 40 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது. 6 மனுக்கள் தள்ளுபடியாகின. 3 மனுக்கள் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆமூர் பகுதி வருவாய் ஆய்வாளர் பஷீர் தலைமை வகித்தார். விஏஓ பிரியா, வருவாய்த் துறையினர் முன்னிலை வகித்தனர்.