திருச்சி மாவட்டம், முசிறி ஒன்றியத்தில் உள்ள பெரிய கொடுந்துறை, ஏவூர், தண்ணீர் பந்தல், முவானூர் ஆகிய கிளைகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
கிளைச் செயலர்கள் சந்திரசேகர், சத்தியராஜன், சுப்பிரமணியன், வீரபுத்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றிய செயலர் வி.சி. சண்முகம் துணைச் செயலர்கள் வி. சத்தியராஜன் எ. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் அக் 17-ல் முசிறி கைகாட்டியில் நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளான பொதுமக்களை திரட்டி வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.