திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில், சபரிமலை வழிபாடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரி அமைதிப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஐயப்ப குருசாமிகள் கள்ளக்காம்பட்டி கருப்பசாமி, லோகநாதன் ஆகியோர் தலைமையில் நத்தம் பிரிவு சாலை விநாயகர் கோயிலில் இருந்து புறப்பட்ட பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பூதநாயகி அம்மன் கோயிலில் நிறைவுற்றது. பாஜக மாவட்ட துணைத் தலைவர் பிரின்ஸ் இளங்கோவன், பொன்னம்பட்டி நகர தலைவர் ராமச்சந்திரன், பொதுச் செயலர் வரதன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.