திருச்சி மாவட்டம், லால்குடி பரமசிவபுரம் பகுதியில் வசித்த பிளஸ் 2 மாணவி மர்ம காய்ச்சலால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
லால்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள பரமசிவபுரம் முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி மகள் சௌமியா (17). இப் பகுதியில் உள்ள எல்என்பி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
கடந்த 3 நாட்களாக தொடர் காய்ச்சலால் அவதிப்பட்ட இவரை வெள்ளிக்கிழமை இரவு லால்குடி அரசுப் பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மருத்துவர்கள் மாணவியை பரிசோதித்தபோது வழியிலேயே அவர் இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். லால்குடி போலீஸார் விசாரிக்கின்றனர்.