திருச்சி ஜமால் முகமது கல்லூரி கைக்கூலி கைவிட்டோர் கழகத்தின் சார்பில் வரதட்சிணை எதிர்ப்பு விழிப்புணர்வு மனிதசங்கிலி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி பாரதியார் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எஸ். இஸ்மாயில் முகைதீன் தலைமை வகித்தார். விடுதி இயக்குநர்கள் கே.என். முகமது பாசில், எம்.ஏ. ஜமால் முகமது யாசீன் ஜூபேர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு யூத் எக்ஸ்னோரா நிறுவனரும், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினருமான பி. மோகன், ஜமால் முகமது கல்லூரிச் செயலர் மற்றும் தாளாளர் ஏ.கே. காஜா நஜ்முதீன் , பொருளாளர் எம்.ஜெ. ஜமால் முகமது ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் மத்தியில் பேசினர். தொடர்ந்து பாரதியார் சாலையின் ஒரு பகுதியிலிருந்து ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி வரை மாணவர்கள் மனிதசங்கிலியில் அணிவகுத்து நின்றனர். வரதட்சிணை வாங்கக்கூடாது, அப்படி வாங்குவது சமுதாயத்துக்கு இழுக்கு, வரதட்சிணையைத் தவிர்ப்போம் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களை அடங்கிய அட்டைகளையும் அவர்கள் ஏந்திச் சென்றனர்.
ஏற்பாடுகளை கைக்கூலி கைவிட்டோர் கழகத்தின் புல ஆலோசகர் முனைவர் எஸ். நாகூர் கனி, இக்கழகத்தின் எம். முகமதுஇப்ராஹிம், முகமது ஆசிக், முகமது ரிஸ்வான், சையது சுல்தான் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.