இரு சக்கர வாகனம் குழியில் விழுந்து தொழிலாளி சாவு

துறையூர் அருகே  கரிகாலி சாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் செல்வராஜ்(34). இவர், இவருடைய சகோதர

துறையூர் அருகே  கரிகாலி சாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் செல்வராஜ்(34). இவர், இவருடைய சகோதர முறை உறவினர் சஞ்சீவி மகன் ராஜா(23) வின் புல்லட்டின் பின்னால் அமர்ந்து கீரம்பூரில் உள்ள உறவினரைப் பார்த்துவிட்டு ஞாயிறு இரவு ஊர் திரும்பினர். கண்ணனூர் பாளையம் தேவரப்பம்பட்டி இடையே கல்லுக்குடி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட  குழியில் இரு சக்கர வாகனம் திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜெம்புநாதபுரம் போலீஸார் ராஜா மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com