மனைவி நல வேட்பு நாள் விழா

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் சார்பில் 11-ஆம் ஆண்டு மகரிஷி

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் சார்பில் 11-ஆம் ஆண்டு மகரிஷி பிறந்தநாள் மற்றும் மனைவி நல வேட்பு நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிர்வாக அறங்காவலர் பேராசிரியர் ஆ. வரதராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எல். அருளரசன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர் சி. கிரீஸ்குமார், மருத்துவர்கள் ஜி. சாமிஜி, ஆர்.எல். அனுஷா சாமிஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை துணைத் தலைவர் என். பொன்னுச்சாமி உலக சமாதானக் கொடியேற்றினார். 
இறை வணக்கத்தை ஜி. பூங்கோதையும், குரு வணக்கத்தை கே. ராஜேஸ்வரியும் கூற, துணைப் பேராசிரியர் அக்குஹீலர் வே. கல்யாணி தவ நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மகரிஷி பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் ஆசான். கரு. ராஜகோபால் சிறப்புரையாற்றினார். மனைவி நல வேட்பு நாளை முன்னிட்டு தம்பதியினர் காந்த பரிமாற்ற தவம் மேற்கொண்டனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com