துறையூர் அருகே ஜம்பேரியில் பனை மர விதைகள் வெள்ளிக்கிழமை விதைக்கப்பட்டது.
வைரிச்செட்டிப்பாளையம் லயன்ஸ் சங்கம் சார்பில் ஜம்பேரி கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியை லயன்ஸ் சங்க மாவட்ட துணை ஆளுநர் ஜெ.கார்த்திக் பாபு தொடக்கி வைத்தார். வைரிச்செட்டிப்பாளையம் லயன்ஸ் சங்கத் தலைவர் பாலா தலைமை வகித்தார்.
லயன்ஸ் சங்கத்தினர், மகளிர் சுய உதவிக் குழுவினர்கள், தன்னார்வலர்கள், கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஜம்பேரி கரையின் இருபுறங்களில் சிறிதாக குழிகளைத் தோண்டி பனை மர விதைகளை விதைத்தனர்.