தா.பேட்டை ஒன்றியத்தில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் ராமச்சந்திரன் (முசிறி), கே.கே.ஆர்.சேகரன் (தா.பேட்டை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சியில் அதிமுக அரசைக் கண்டித்தும், குட்கா ஊழலில் தொடர்புடைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரை பதவி நீக்க வலியுறுத்தி வருகிற செவ்வாய்க்கிழமை (செப்.18) நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் திரளாக பங்கேற்க தீர்மானிக்கப்பட்டது.