தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், திருநெல்வேலி- மயிலாடுதுறை பயணிகள் ரயில் திருச்சி- திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தின் சார்பில் பொறியியல் பணிகள் நடைபெறஉள்ளன. இதனால், வண்டி எண் 56822/ 56821 திருநெல்வேலி- மயிலாடுதுறை-திருநெல்வேலி பயணிகள் ரயில் ஏற்கெனவே திருச்சி-தஞ்சாவூர்-திருச்சி இடையே கடந்த 6 ஆம் தேதி 30 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருச்சி-திண்டுக்கல்- திருச்சி இடையே இந்த ரயில் சனிக்கிழமை ( செப்.15) முதல் 30 ஆம் தேதி வரை ( புதன் மற்றும் சனிக்கிழமைகளைத் தவிர) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.