சிறுவனிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய ரௌடிகள் 2 பேர் கைது

திருவானைக்கா பகுதியில் சிறுவனிடம் கத்தியைக் காட்டி பணம் பறிக்க முயன்ற ரௌடிகள் 2 பேரைப் போலீஸார் கைது செய்தனர்


திருவானைக்கா பகுதியில் சிறுவனிடம் கத்தியைக் காட்டி பணம் பறிக்க முயன்ற ரௌடிகள் 2 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
திருவானைக்கா சிங்கப்பெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்த முத்து மகன் மாரி (17). இவர், வெள்ளிக்கிழமை மாலை கலர் மீன்கள், தொட்டி வாங்குவதற்கு ரூ.2 ஆயிரம் எடுத்து வந்தார். காந்தி ரோட்டில் மீன் தொட்டி, மீன்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் 3 ரவுடிகள் மாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து வீட்டில் இருந்த அவரது தந்தை முத்துவிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த அவரையும் அங்கிருந்த ரவுடிகள் மூவரும் இவரையும் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். புகாரின் பேரில் சிங்கப்பெருமாள் கோயில் கும்படம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (20), முகமது அலி ஜின்னா (17) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். மற்றொரு ரவுடியான வேலி குஞ்சன் (22) தலைமறைவாகிவிட்டார். இவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com