பாரதிய கிசான் சங்கத்தின் சார்பில் லால்குடியில் தேசிய விவசாயிகள்தினவிழா- பலராமர் ஜெயந்தி சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆண்டுதோறும் ஆவணிமாதம் சுக்லபட்ச சஷ்டி திதியில் பலராமர் ஜெயந்தி கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளை பாரதிய கிசான் சங்கம் தேசிய விவசாயிகள் தினமாகக் கொண்டாடி வருகிறது. நிகழாண்டுக்கான பலராமர் ஜெயந்தி விழா லால்குடி கிளை சார்பில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. லால்குடி நகரத் தலைவர் கே. முருகானந்தம் விழாவுக்குத் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் மருதநாயகம், ஒன்றியப் பொருளாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செய்தித் தொடர்பாளர் என். வீரசேகரன், தென்பாரத அமைப்புச் செயலர் கணேசன் ஆகியோர் சிறப்புரையாற்றி, பலராமர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.