பெஸ்டம்பர் கலைவிழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற மாணவர்கள்

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்று வரும் பெஸ்டம்பர் கலைவிழாவில் பல்வேறு


திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்று வரும் பெஸ்டம்பர் கலைவிழாவில் பல்வேறு
கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
திருச்சி என்.ஐ.டி பெஸ்டம்பர் கலைவிழாவில் சனிக்கிழமை நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்வில் கர்நாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராமும், புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர் அஸ்வின் சங்கியும் தத்தம் துறைகளில் தாங்கள் நிகழ்த்திய சாதனைகளையும்,அதற்காக அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துரைத்துப்பேசினர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்தும் அவர்கள் பேசினர்.
இதைத் தொடர்ந்து பொன்விழாக் கருத்தரங்கில் நடைபெற்ற நடனப் போட்டிகளில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மின் மற்றும் மின்னணுப் பொறியியல் துறைக் கலையரங்கில் வினாடி வினா, ஆங்கிலஇலக்கியப் போட்டிகள், தெருக்கூத்து, வீதி நாடகம் மற்றும் கோடம்பாக்கம் சினி குவிஸ் நிகழ்வுகளும் நடைபெற்றன. தனிநபர் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவ, மாணவிகள் நாளிதழ்களை உடையாக அணிந்து வந்து அலங்காரப் போட்டியையும் நடத்தினர். இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகள் கலைவிழாவில் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com