ஏ.டி.எம். இயந்திரக் கதவு திறந்துகிடந்ததால் பரபரப்பு

திருவானைக்கா மேலவிபூதி பிரகாரத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம் மையத்தில், தானியங்கி பணப்பட்டுவாடா

திருவானைக்கா மேலவிபூதி பிரகாரத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம் மையத்தில், தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரக் கதவு திறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதன்கிழமை காலை இங்கு பணம் எடுக்க வந்தவர்கள், இயந்திரத்தின் கதவு திறந்து கிடந்ததைக் கண்டு  ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்கும், வங்கிக்கும் தகவல் தெரிவித்தனர். 
இதையடுத்து போலீஸார் அங்கு வந்து பார்வையிட்டனர். மேலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையிலிருந்து இயந்திரத்தை  கையாளும் தொழிலாளர்கள் அங்கு வந்து, திறந்து கிடந்த பணப்பட்டுவாடா இயந்திரத்தை பூட்டி சரி செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com