பஞ்சப்பூத திருத்தலத்தில் நீர்த்தலமானது திருவானைக்கா கோயிலில் நடைபெறும் அனைத்து உற்ஸவ விழாக்களும் மிகவும் பிரசித்திபெற்றது.
இதில், வரும் 19 ஆம் தேதி நடைபெறும் பஞ்சப்பிரகார வைபவ காட்சி விழாவும் ஒன்று. அழகான பெண்ணின் மீது மோகம் கொண்டு படைத்தல் தொழிலை மறந்து விட்டான் பிரம்மன். அவரை சந்திக்கச்சென்ற சிவபெருமான், பார்வதி ஆகியோர் உருமாறி சென்றனர்.
பிரம்மன் தன் தவ வலிமையால் உருமாறி வந்த இறைவனை தரிசித்து தனது தவறை மன்னிக்குமாறு கோரினார். ஆசையைத் துறக்க வேண்டும் என்பதை மையக் கருத்தாகக் கொண்டு இறைவன் இறைவியாகவும், இறைவி இறைவனாகவும் உருமாறி 5 பிரகாரங்களையும் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.