திருச்சியில் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தை முடித்து, நாமக்கல் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முசிறி, தொட்டியத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் வரவேற்பு அளித்தனர்.
திருச்சியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து சனிக்கிழமை காலை பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், குளித்தலை, முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கல் சென்றார்.
அப்போது, முசிறி- குளித்தலையை இணைக்கும் தந்தை பெரியார் பாலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முசிறி ஒன்றியத்தினரும், தொட்டியம் வாணப்பட்டறை அருகே தொட்டியம் ஒன்றியத்தினரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.