லால்குடி வட்டம், குமுளூரிலுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை, அறிவியல் கல்லூரியில் குழு கலந்துரையாடல் உத்திகள் குறித்த பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு கல்லூரி முதல்வர் ரா.சுவாமிநாதன் தலைமை வகித்தார். கல்லூரி மேலாண்மைத்துறைத் தலைவர் பேராசிரியர் ஜெ. மணிவண்ணன் பயிற்சியைத் தொடக்கி வைத்தார். திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி மேலாண்மைத்துறை பேராசிரியர் ஜெ. ராஜேஸ், குழு கலந்துரையாடல் உத்திகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு பயிற்சி வழங்கினார். முன்னதாக, பேராசிரியை தீபாதேவி வரவேற்றார். நிறைவில், பேராசிரியர் வேம்பு நன்றி கூறினார்.