காவிரியாற்றில் மூழ்கிபல் மருத்துவக் கல்லூரி மாணவர் பலி

திருச்சி கம்பரசம்பேட்டை பகுதி காவிரியாற்றில் மூழ்கி பல் மருத்துவக் கல்லூரி மாணவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.


திருச்சி கம்பரசம்பேட்டை பகுதி காவிரியாற்றில் மூழ்கி பல் மருத்துவக் கல்லூரி மாணவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
 திருச்சி பீமநகர் நியூராஜா காலனியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ஆடன்(23). சென்னையில் மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவம் இறுதியாண்டு படித்து வந்த இவர்,  விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்தார்.
செவ்வாய்க்கிழமை தனது நண்பர்களுடன் கம்பரசம்பேட்டை பகுதி காவிரியாற்றில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கினர். நண்பர்கள் அவரைக் காப்பாற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 
எனினும் சிகிச்சை பலனின்றி  ஆடன் உயிரிழந்தார். இதுகுறித்து ஜீயபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com