சிங்கப்பூரிலிருந்து முறைகேடாக கொண்டு வரப்பட்ட 100 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் திருச்சி விமானநிலையத்தில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூரிலிருந்து செவ்வாய்க்கிழமை திருச்சி வந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது திருவாரூரைச் சேர்ந்த வெள்ளையம்மாள், உரிய அனுமதியின்றி ரூ. 3.15 லட்சம் மதிப்பிலான 100
கிராம் தங்க நகைகளை தனது உடைமைகளுக்குள் மறைத்து முறைகேடாக எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.