லால்குடி அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுவன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
லால்குடி அருகிலுள்ள மயிலரங்கம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலுசாமி. தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இவர், தனது மனைவி பொன்மொழி, மகள் தீபிகா, மகன் சூர்யாவுடன் செவ்வாய்க்கிழமை சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அம்மன் தரிசனத்துக்குப் பிறகு சிறுமருதூர் வழியாக ஊருக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் பாலுசாமி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அனைவரும் கீழே விழுந்தனர். பலத்த காயமடைந்த சூர்யா ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சமயபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.