சேலம் கோட்டத்திற்குட்பட்ட கரூர் வழித்தடத்தில் பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சேலம் கோட்டத்திற்குட்பட்ட கரூர் வழித்தடத்தில் சாவடிபாளையம் - பாச்சூர் இடையே பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதையொட்டி திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் (வண்டி எண் 56841) கொடுமுடி- ஈரோடு இடையே ஏப். 23, 26 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.