திருச்சி காஜாமலை லூர்துசாமிபிள்ளை காலனியைச் சேர்ந்தவர் இளங்கோ(37). கூலித் தொழிலாளியான இவர், நீண்ட நாள்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதனால், மனமுடைந்த அவர் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.