திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்து தீக்காயமடைந்த வியாபாரி வெள்ளிக்கிழமை இரவு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
காட்டுப்புத்தூர் வடக்கு முத்துராஜா தெருவைச் சேர்ந்த தா.சிவப்பிரகாசம் (54). இவர் வாழை இலை வியாபாரம் செய்து வந்தார். கடந்த ஏப். 8 ஆம் தேதி மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்தபோது, அடுப்பு வெடித்து பலத்த தீக் காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு இறந்தார். சம்பவம் தொடர்பாக காட்டுப்புத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.