மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

உப்பிலியபுரம் அருகே மின் கசிவு ஏற்பட்டிருந்த கொடியில் துணியை உலர்த்திய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

உப்பிலியபுரம் அருகே மின் கசிவு ஏற்பட்டிருந்த கொடியில் துணியை உலர்த்திய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் கார்த்திகேயன் ( 25). கூலித் தொழிலாளி. இவருடைய பெற்றோர் இருவரும் இறந்துவிட்ட நிலையில், தனது பணிகளைத் தானே செய்து வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை தனது துணிகளை துவைத்து அண்டை வீட்டு மாடியில் உலர்த்திக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு  மூர்ச்சையடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை உப்பிலியபுரம் அரசு மருத்துவமனையில் எடுத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கார்த்திகேயன் உயிரிழந்து விட்டதாகக்  கூறினர். இதையடுத்து,  சடலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. தகவலறிந்து   வந்த உப்பிலியபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com