வீட்டுக்குள் புகுந்து உறங்கியிருந்தவர்களிடம் நகைகள் திருட்டு

துறையூரில் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் நகைகளை மர்மநபர் பறித்துச் சென்றார்.  


துறையூரில் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் நகைகளை மர்மநபர் பறித்துச் சென்றார்.  
துறையூர் கிழக்குத் தெப்பக்குளத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(70). இவருடைய மனைவி செந்தமிழ் பூங்கொடி(66). இருவரும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள். இவருடைய மகன் கார்த்திகேயன்(36). இவர்கள் அனைவரும் ஏப். 16 ஆம் தேதி இரவு வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் தாழ்ப்பாளைத் திறந்து உள்ளே சென்று உறக்கத்திலிருந்த கார்த்திகேயனின் கழுத்திலிருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, செந்தமிழ்பூங்கொடியின் 12 பவுன் தாலிக்கொடி ஆகியவற்றை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. புகாரின் பேரில் துறையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com