திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகேயுள்ள அரசலூர் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி ரத்தினம் (54). இவர், சனிக்கிழமை மாலை கார்த்திகைபட்டி பிரிவு சாலை அருகே நடந்து வந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார். தொட்டியம் போலீஸார் வழக்கு பதிந்து பாலசமுத்திரம் சேர்ந்த முகமது இஸ்மாயில் (27) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.