சென்னை பாடி எம்டிஎச் சாலை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி கவிதா(33). இவர், ஏப்ரல் 18 ஆம் தேதி புதுக்கோட்டையில் வசித்து வந்த தனது தந்தை மறைந்ததையொட்டி துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். நிகழ்ச்சி முடிந்து சென்னை செல்ல சனிக்கிழமை திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவர் வைத்திருந்த கைப் பையில் இருந்த ரூ.1 லட்சம் திருடு போனது. இதுகுறித்து கவிதா கொடுத்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.