திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கும் புத்தகக் கண்காட்சியில் சலுகை விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படவுள்ளது.
இது குறித்து மாவட்ட மைய நூலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பது : உலக புத்தக தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட மைய நூலகத்தில், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் கெளரா புத்தக நிலையம் ஆகிவற்றுடன் இணைந்து புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது. ஏப்ரல் 23 ஆம் தேதி தொடங்கும் இந்த கண்காட்சி மற்றும் விற்பனை காலை 8 மணி தொடங்கி இரவு 8 மணி வரையில் நடைபெறுகின்றது. இதில், விற்பனை செய்யப்படும் புத்தகங்களுக்கு (நூல்களுக்கு) 10 முதல் 25 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்படவுள்ளது.