சமஸ்கிருத பாரதி அமைப்பின் மூலம் திருச்சி மாநகரில் 19 இடங்களில் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 4 ஆம் தேதி வரை சமஸ்கிருத பேச்சுப் பயிற்சி வகுப்பு இலவசமாக நடத்தப்படவுள்ளது.
இதுதொடர்பாக, அந்த அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் டி.எஸ்.ரெங்கராஜன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு சாரா தொண்டு நிறுவனமான சமஸ்கிருத பாரதி அமைப்பின் சார்பில் இலவச சமஸ்கிருத மொழி பேச்சுப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
திருச்சி மாநகரில் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 4 ஆம் தேதி வரை 19 இடங்களில் சமஸ்கிருத இலவச பேச்சுப் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது. தினசரி 2 மணிநேரம் வீதம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்கு முன்பே சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பயிற்சி முழுவதும் இலவசம். மேலும் விபரங்களுக்கு 94437 22042 அல்லது 89030 85099 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.