கடவுச்சீட்டில் போலி முத்திரையிட்டு மலேசியாவிலிருந்து திருச்சி வந்த பஞ்சாப் இளைஞரை விமானநிலைய போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை காலை வந்த மலிண்டோ விமானபயணிகளின் ஆவணங்களை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பஞசாப்பைச் சேர்ந்த குர்வன்சிங்(30) என்பவர் தனது கடவுச்சீட்டில் போலி முத்திரையிட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து புகாரின் பேரில் திருச்சி விமானநிலைய போலீஸார் குர்வன்சிங் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.