பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

திருச்சி மாவட்டம் முசிறி பேரூராட்சியில் 5 ஆவது வார்டில் ஏழு ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையை சீரமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

திருச்சி மாவட்டம் முசிறி பேரூராட்சியில் 5 ஆவது வார்டில் ஏழு ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையை சீரமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
முசிறி பேரூராட்சிக்குள்பட்ட 5 ஆவது வார்டு பகுதியில் உள்ள ஆலமரத்துப்பட்டி முதல் குஞ்சாநாயக்கன்பாளையம் வரை செல்லும் சாலையானது சேதமடைந்து குண்டும் குழியமாக உள்ளது. மேலும் இச்சாலையில் தெரு விளக்குகளும் எரியாததால் இருசக்கர வாகனத்தில் வருவோர் தடுமாறி விழுந்து பலத்த காயமடைகின்றனர். 
எனவே இச்சாலையை சீரமைக்க வேண்டி முசிறி போரூராட்சி அலுவலகத்தில் இப்பகுதி மக்கள் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com