திருச்சி உறையூர் பாத்திமா நகரில் வசித்து வந்த ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி வீட்டில் 40பவுன் தங்க நகைகள் திருடு போனது தொடர்பாக செவ்வாய்க்கிழமை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி உறையூர் பாத்திமா நகர் 2 வது பிரதானச் சாலையில் வசித்து வந்தவர் மாரிமுத்து(71)இவர் மின்வாரியத்தில் கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவரது மனைவி சிவகாமி. இருவரும் வீட்டைப் பூட்டி விட்டு மதுரையில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவுகள், பீரோ ஆகியன உடைக்கப்பட்டிருந்தது.மேலும் , பீரோவிலிருந்த 40 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தன. இது குறித்து மாரிமுத்து உறையூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீஸாரின் விசாரணையில் அவர்கள் வீட்டின் சாவியை ஒரு மறைவான இடத்தில் வைத்திருந்ததாகவும், அது தெரிந்த ஒருவரே திருடியிருக்கலாம் எனவும் தெரிவித்தன் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.