துறையூர் பகுதியில் இடியுடன் மழை

துறையூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை இடி காற்றுடன் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


துறையூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை இடி காற்றுடன் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
ஏப்ரல் மாதம் தொடங்கியதிலிருந்தே கோடை வெயில் தாக்கம் காரணமாக பொதுமக்கள் அவதியுற்றனர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்து நான்கு நாள்களாக துறையூர் மற்றும் தளுகை, கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், கண்ணனூர், கிழக்குவாடி, கண்ணனூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களிலும் தொடர்ந்து இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்கிறது. மழை காரணமாக முற்பகலிலும், மாலையிலும் வெப்பம் தணிந்து காற்று வீசுவதால் துறையூர் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com